Sunday, April 24, 2016

குளிக்கும் கலையை தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

      உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்று தெரிய வாய்ப்பில்லை. அழுக்கு போகவா? நிச்சயம் கிடையாது! நம் குளியலறையில் சோப்பும் ஷாம்புவும் எப்படி நுழைந்தன?
சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இதுவே பயன்பட்டது.
சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம்? எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்?
வணிக பெருமுதலைகள சும்மா இருப்பார்களா! ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த சோப்பை, எல்லோரும் பயன்படுத்தும் படி பல திட்டம் தீட்டி, கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி, நடிகர்களை நடிக்க விட்டு விளம்பரம் செய்து நம் தலையில் கட்டி விட்டார்கள்!
இதன் மூலம் என்ன ஆனது?
சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு படலத்தை நீக்கி விட்டேம்!இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது!
நமக்கு உணவு உண்ண வாய் முகத்தில்! தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் லட்சகணக்கான வாய்களே! ஆனால் இந்த வாய்கள் நம் உடம்பில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலம் வெளியேற்றவே! சோப்பு போடுவதன் மூலம் வியர்வை துவாரங்கள் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து நம் உடலை பல வழிகளில் பாதிக்கிறது!
சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தியும் தடுக்கப்படுகிறது!
இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது!!
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்!
குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.
நமக்கு உள்ள பெரும்பாண்மையான நோய்களுக்கு காரணம் அதிகப்படியான நம் உடல் வெப்பமே. இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம்!
வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் தலையில் சிறிது தெளித்துக் கொண்டு பிறகு காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. எதற்கு இப்படி? காலில் இருந்து ஊற்றினால் தான் தம் உடலில் உள்ள வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, தலையில் உள்ள துவாரங்கள் வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்!
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும். இறங்கும் முன் ஒன்று செய்வார்கள், கவனித்ததுண்டா? உச்சந் தலைக்கு சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு இறங்குவார்கள். இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்!
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
நம் பழங்கால குளியல்முறை வியப்படைய வைக்கிறது அல்லவா! நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் அர்த்தங்கள் உண்டு! குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் சுத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக் கொள்ளும். அசுத்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும்!
குளியலில் இத்தனை காரணங்கள் இருக்கும் போது, நம் குளியல் அறையில் நாம் சுடு தண்ணீரில் சோப்பும், ஷேம்புவையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்!
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - குளிர்ந்த தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல நம் உடலை குளிர்சி படுத்தவே! சாதாரண குளியலுக்கு சோப்பு தேவையில்லை. உங்கள் கைகளினாலேயே உடலை தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள்! வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊறியபின் சீக்காய்தூள் கொண்டு உடலில் ஊறாத எண்ணெயை அகற்றுங்கள்! சோப்பு ஷேம்பு செலவு மிச்சம். நம் பணத்தை நாமே செலவு செய்து நோயை விலைக்கு வாங்க வேண்டுமா?
நம் ஆரோக்யம் நம்கையில்!

No comments: