Wednesday, January 10, 2018

எளிய கடன் நிவர்த்தி முறை

   கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமேதவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டுகொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்குகொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழேகொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன்பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம்வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில்வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கிவரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும்ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கிகொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கிஅதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார்சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள்செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்துஅரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில்உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதைஅனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கிசெய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மிசன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்


No comments: